மரண வீட்டுக்கு சென்று திரும்பிய பேருந்து கோர விபத்தில் சிக்கியது..! 13 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
மரண வீட்டுக்கு சென்று திரும்பிய பேருந்து கோர விபத்தில் சிக்கியது..! 13 பேர் படுகாயம்..

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொனராகலை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு மரண வீடு ஒன்றுக்காக சென்று கொண்டிருந்த போது, ரதல்ல குறுக்கு வீதியில் வைத்து 

முன்னே சென்ற பவுசர் ரக வானகத்துடன் மோதி, இழுத்துச் சென்று மண்மேட்டில் மோதுண்டே குறித்த பஸ் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான பஸ்ஸில் 18 பேர் பயணித்துள்ளதுடன், இதில் 13 பேர் பலத்த காயங்களுடன் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு