யாழ்.புங்குடுதீவு குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவு சென்ற இருவர் மாயம்..! ஆட்களற்ற படகு நெடுந்தீவில் கரை ஒதுங்கியது..

ஆசிரியர் - Editor I
யாழ்.புங்குடுதீவு குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவு சென்ற இருவர் மாயம்..! ஆட்களற்ற படகு நெடுந்தீவில் கரை ஒதுங்கியது..

யாழ்.புங்குடுதீவு குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு பயணமான படகு ஒன்றில் பயணித்த இருவர் காணாமல்போயுள்ளதாகவும், ஆட்களற்ற நிலையில் படகு நெடுந்தீவில் கரையொதுங்கி உள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

இன்று மதியம் 1 மணியளவில்  குறிகட்டுவானில் இருந்து இருவர் படகு மூலம் நெடுந்தீவுக்கு பயணமானதாகவும் பின்னர் ஆட்களற்ற நிலையில் படகு கரை ஒதுங்கியதாகவும் படகில் அவர்கள் ஏற்றிவந்த ஐஸ் கட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. 

இந்நிலையில் படகில் பயணித்தவர்களை தேடும் நடவடிக்கை கடற்படை மற்றும் மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. குறித்த சம்பவத்தில் ஞானசிங்கம் றொபின்சன் (வயது43), மரியவேதநாயம் நெயன் (வயது20) ஆகிய இருவரே காணாமல்போயுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு