"இழப்பே இனி நம் பலமாய்" உலக தமிழ் மொழி தினம் யாழ்.மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது..

ஆசிரியர் - Editor I

தமிழ்தேசிய மக்கள் முன்னணியினால் "இழப்பே இனி எம் பலமாய்" எனும் தொனிப்பொருளில் உலக தமிழ் மொழி தினம் யாழ்ப்பாணத்தில் இன்று கொண்டாடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கலை பண்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் நவலர் கலாசார மண்டபத்தில் தாய்மொழி தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வின் முதன்மை விருந்தினர்களாக, வாழ்நாள் பேராசிரியர் அருணாச்சலம் சண்முகதாஸ் மற்றும் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் 

கலந்து கொண்டிருந்த அதே வேளை சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழ்துறை தலைவர் பேராசிரியர் சி.சிவலிங்கராஜாவும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்தோடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்று உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், 

சட்டத்தரணி க.சுகாஸ், ந.காண்டிபன் மற்றும்  கட்சியின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு