யாழ்.நல்லூர் கோவில் வீதியில் மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I

யாழ்.நல்லூர் - கோவில் வீதியில் திடீரென மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரழந்துள்ளார். குறித்த சம்மவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 75 வயதுடைய நபரே இவ்வாறு வீதியில் மிதி வண்டியில் பயணித்த போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் உயிரிழந்தவர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் மரக்கறி கடை நடாத்துபவர் இன்று காலை வீட்டில் இருந்து மரக்கறி வாங்க திருநெல்வேலி பொதுச் சந்தைக்கு சைக்கிளில் சென்றதாகவும் 

அவரது உறவினர்கள் தெரிவித்தனர் குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாடபொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு