மோட்டார் சைக்கிளுடன் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்த்தர்..! பருத்துறையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.பருத்துறை - திக்கம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கற்கோவலத்தைச் சேர்ந்த பவிகரன் (வயது -30) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார். இன்று காலை அந்த வீதியூடாகப் பயணித்தவர்கள் 

பருத்தித்துறை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு