யாழ்.நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவில் சீனாவுக்கு வழங்கப்போகும் காணிகளை அடையாளப்படுத்தியுள்ள மின்சாரசபை..!
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகியவற்றில் மீள் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டத்திற்காக சீனாவுக்கு நிலம் வழங்கப்படவுள்ள நிலையில், இலங்கை மின்சார சபை காணிகளை அடையாளப்படுத்தி தமது பெயர் பலகைளை நாட்டியுள்ளது.
தீவகத்தில் மீள் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டத்திற்காக சீனாவுக்கு காணி வழங்கப்படவுள்ளதாகவும், சீனாவுக்கு இல்லை இந்தியாவுக்கே காணி வழங்கப்படும் எனவும் இழுபறிநிலை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில்,
ஏற்கனவே திட்டமிட்டு காணிகளை அடையாளப்படுத்தி மின்சாரசபையினர் தமது பெயர் பலகைகளை நாட்டியிருக்கின்றமையினை காணக்கூடியதாகவுள்ளது. இதேவேளை குறித்த திட்டம் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருப்பதுடன்,
குறித்த தீவுகளில் உள்ள மக்களின் அபிப்பிராயம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்திருந்த செய்தி பார்வையில் சீனாவுக்கு காணி வழங்குவதை பிரதேச மக்கள் கடுமையாக எதிர்த்திருக்கின்றனர்.