தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேசத்திற்கான நிர்வாகத் தெரிவு

ஆசிரியர் - Admin
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேசத்திற்கான நிர்வாகத் தெரிவு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேசத்திற்கான நிர்வாகத் தெரிவுக் கூட்டம் இன்று (18/03/2018) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் சுன்னாகத்தில் நடைபெற்றது. 

 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வலிகாமம் தெற்கு பிரதேசத்துக்கான செயலாளராக ம.இராஜமேனகன், பொருளாளராக க.கருணாகரன், உப செயலாளராக கி.மயூரன், நிர்வாகச் செயலாளராக சி.சிவசங்கர், கல்விப் பொறுப்பாளராக தா.அன்ரன் செவ்வகுமார், இளைஞரணித் தலைவராக இ.உஷாந், புள்ளி விபரப் பொறுப்பாளராக பா.லோசிதகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு