யாழ்.போதனா வைத்தியசாலை பீ.சி.ஆர் முடிவுகள் வெளியானது..! வடமாகாணத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 793 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் வடமாகாணத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை வெளியிட்டுள்ளது. இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்கும், மன்னார் மாவட்டத்தில் 5 பேருக்கும் கொரோனா தொற்று
உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.