ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 3 பேர் கொண்ட குழு இராணுவம் மீது தாக்குதல் நடத்தியதாம்..! மேலும் இருவர் தேடப்படுகிறார்களாம்..

ஆசிரியர் - Editor I

வவுனியா - முசல்குத்தி பகுதியில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவத்தில் இளைஞர் குழு ஒன்று இராணுவம் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் இராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் இராணுவ தரப்பு கூறியுள்ளது.

செட்டிகுளம் - முசல்குத்தி பகுதியில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டு செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடக பிரிவு கூறுகையில், வில்பத்து வனப்பகுதியில் பாதுகாப்பு கடமைகளுக்கு சென்றிருந்த இராணுவத்தினர் மீது ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 3 பேர் கொண்ட குழு துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், 

பதிலுக்கு இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இருவர் தப்பி ஓடிய நிலையில் ஒருவர் காயத்துடன் மீட்கப்பட்டதாகவும் தப்பி ஓடியோரை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டிருக்கின்றது. 

ஆனால் காட்டில் விறகு வெட்ட சென்றவர்கள் மீதே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக காயமடைந்த இளைஞன் தரப்பிலிருந்து கூறப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு