யாழ்.பல்கலைகழக மாணவர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட பரிசோதனையில் 6 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக மாணவர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட பரிசோதனையில் 6 பேருக்கு தொற்று உறுதி..

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் இன்று 373 நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.பல்கலைகழக மாணவர்கள் 5 பேர் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இதன்படி காத்தான்குடி, கல்முனை மற்றும் மூதூரைச் சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக இணைந்த விஞ்ஞான சுகாதார கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்களும்

பல்கலைக்கழக மாணவர் விடுதியில் கடந்த இரண்டு வாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அத்துடன் கம்பஹாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஒருவருக்கு 

எழுதுமட்டுவாழ் வீதித் தடையில் இன்று பெறப்பட்ட மாதிரிகளின் அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூத்தில் 373 பேரின் மாதிரிகள் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்திய நிலையில் 6 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு