யாழ்.மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலர் பிரிவில் மட்டும் 247 தனியாருடைய காணிகளை சுவீகரிக்க அரசு பிரயத்தனம்..!

ஆசிரியர் - Editor I

யாழ்.சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 247 தனிநபர்களுடைய காணிகளை அமைச்சுக்கள், திணைக்களங்களின் தேவைகளுக்காக சுவீகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு அமைச்சு மற்றும் சில அமைச்சுக்களின் தேவைகளுக்காக சுமார் 247 தனிநபர்களின் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான காட்சிப்படுத்தல்களும் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் சங்கானை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 

பிரதேச அபிவிருத்தி கலந்துரையாடலின் போதே குறித்த விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. குறித்த சுவீகரிப்பானது பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு , உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, 

சுகாதார சுதேச வைத்திய துறை அமைச்சு, மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்காக  மேற்கொள்ளப்படவுள்ளது.

2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 வரையான காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட சுவீகரிப்பு நடவடிக்கைகளில் குறித்த தனியார்  காணிகள் அடங்குகின்றன.

குறித்த காணி சுவீகரிப்பு தொடர்பில் பிரதேச அபிவிருத்தி கலந்துரையாடலில் எவ்வகையான தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு