வடமாகாணத்தில் இன்று 1530 பேருக்கு தடுப்பூசி..! நாளையுடன் தடுப்பூசி வழங்கும் 1ம் கட்டம் நிறைவு..

ஆசிரியர் - Editor I

வடமாகாண வைத்தியசாலைகள் ஊடாக 2ம் நாளான இன்று 1530 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கின்றது. 

இது 15 சதவீத்ததினர் ஆகும்.இவ்வாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் 

மற்றும் ஊழியர்களுக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் கொவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நேற்று சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த தடுப்பூசி மருந்து வழங்கலுக்கு வடக்கு மாகாணத்தில் 9 ஆயிரத்து 944 சுகாதாரத் துறை சேவையாளர்கள் தகுதி பெற்றனர்.  மூன்று நாள்களுக்கு முன்னெடுக்கப்படும் 

இந்தப் பணியில் முதல் நாளான நேற்று 2 ஆயிரத்து 997 பேர் கோவில் -19 தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர். இது 30 சதவீதத்தினர் ஆகும்.

இரண்டாம் நாளான இன்று வடக்கு மாகாணத்தில் ஆயிரத்து 530 சுகாதார சேவையாளர்கள் கோவில் -19 தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 875 பேரும் கிளிநொச்சியில் 100 பேரும் மன்னாரில் 200 பேரும் வவுனியாவில் 210 பேரும் முல்லைத்தீவில் 145 பேரும் 

இன்று கொவிட் -19 தடுப்பூசி மருந்தைப் பெற்றனர். மூன்றாவது நாள் தடுப்பூசி மருந்து வழங்கல் நாளை முன்னெடுக்கப்படும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு