குப்பை மேடாக மாறியிருந்து யாழ்.குருநகர் கடற்கரையை துாய்மையாக்கும் பணிகள் இன்று ஆரம்பம்..!

ஆசிரியர் - Editor I

யாழ்.குருநகர் பகுதியில் நீண்டகாலம் அகற்றப்படாமலிருந்து பெருமளவு கழிவுகளை அகற்றும் பணிகள் யாழ்.மாநகரசபையினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. 

மாநகரில் உள்ள குருநகர் பகுதியில் கடற்கரையோரம் மிக நீண்டகாலமாக பூரணமாக துப்புரவு செய்யப்படாத நிலையில் பிளாஸ்டிக் கழிவுகள், உள்ளிட்ட பெருமளவு கழிவுகள் தேங்கி

கடற்பகுதி மற்றும் மழை நீரை கடலுக்குள் கொண்டு சேர்க்கும் கழிவுநீர் வடிகால்கள் கழிவுகள் தேங்கிய நிலையில் மோசமாக காணப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று காலை தொடக்கம் குறித்த பகுதியில் கழிவுகளை அகற்றும் நடவடிக்கை மாநகரசபையினால் ஆரம்பித்துவைக்கப்பட்டிருக்கின்றது. 

முன்னதாக யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் குறித்த பகுதிக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடியிருந்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு