கணவன் கண்முன்னால் தனக்கு தானே தீ மூட்டிய 4 பிள்ளைகளின் தாய்..! சிகிச்சை பலனின்றி பலி, யாழ்.நாவற்குழியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I

குடும்ப தகராறு முற்றிய நிலையில் தீயில் எரிந்து படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் யாழ்.நாவற்குழி புதிய வீட்டுத்திட்டம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 4 பிள்ளைகளின் தாயான நீ.நிரோஜினி (வயது 30) என்பவரே இவ்வாறு உரிழந்துள்ளார். 

கணவனுடன் ஏற்பட்ட முரண்பாட்டினை தொடர்ந்து கணவன் கண் முன்னே தனக்கு தானே தீ மூட்டியுள்ளார். அதனை கண்டு பதறிய கணவன் தீயை அணைத்து 

மனைவியை யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.எனினும் அவர், சிகிச்சைப் பலனின்றி நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளதாக 

வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு