இலக்குவைக்கப்படும் தமிழர் வழிபாட்டு தலங்கள்..! உருத்திரபுரம் சிவன் கோவிலில் இராணுவ, பொலிஸ் பாதுகாப்பில் அகழ்வாராச்சிக்கு முஸ்தீபு..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி - உருத்திரபுரம் சிவன்கோவில் (உருத்திரபுரீஸ்வரர்) ஆலய வளாகத்தில் தொல்லியல் அடையாளங்கள் உள்ளதாக கூறி அகழ்வு பணிகளை நடத்த தொல்லியல் திணைக்களம் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றது. 

அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் திணைக்களத்தினர் அண்மையில் குறிப்பிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துவந்த நிலையில் நேற்றையதினம் அப்பகுதிக்கு பௌத்த தேரர் ஒருவர் வந்து சென்றுள்ளார். 

அவர் வந்து சென்ற சில மணித்தியாலங்களின் பின்னர் அப்பகுதிக்கு பொலிஸார் வந்ததாகவும் பின்னர் மாலை வேளையில் இராணுவத்தினர் வந்து அவ்விடத்தை பார்த்து சென்றதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் பரபரப்பான நிலை காணப்படுகிறது. ஏற்கனவ தொல்பியல் திணைக்களத்தால் அப்பகுதி அடையாளம் காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு