முல்லைத்தீவு - குருந்துார் மலை விவகாரம்..! பயந்து நடுங்கிறது அரசு, அமைச்சர் தலமையில் நாளை முக்கிய கலந்துரையாடல்..

ஆசிரியர் - Editor I

முல்லைத்தீவு குருந்துார் மலையில் இடம்பெறும் அகழ்வு பணிகளில் யாழ்.பல்கலைகழக அகழ்வு ஆராய்ச்சி பிரிவினரையும் உள்ளீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் அமைக்கர் விதுர விக்கிரமநாயக்க தலமையில் இடம்பெறவுள்ளது. 

முல்லைத்தீவு குருந்தூர் மலை மற்றும் படலைக்கல்லு ஆகிய பகுதிகளில் தொல்பொருள் ஆராய்ச்சிகள் முன்னெடுப்பதற்கான பூர்வாங்க செயற்பாடுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அங்கு தமிழ் மக்களின் பூர்விக அடையாளங்கள் அழிக்கப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.

அத்துடன் தொல்லியல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் விகாரை அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கும் அபாயமுள்ளதாக சந்தேகங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளின்போது யாழ்.பல்கலைக்கழகத்தினைச் 

சேர்ந்த துறைசார்ந்தவர்களையும் இணைத்துக்கொள்ளுமாறு தமிழ் அரசியல், சிவில் பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை திங்கட்கிழமை, இராஜங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் தொல்லியல்துறை அதிகாரிகள் 

கலந்து கொள்ளும் முக்கிய கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் தமிழ் தரப்பு துறைசார்ந்தவர்களை குருந்தூர் மலை அகழ்வாராய்ச்சிகளின் போது, ஈடுபடுத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு