முன்னாள் போராளிகளை பயன்படுத்தி வடகிழக்கில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவ பயிற்சி கொடுங்கள்..! வரவேற்கலாம் என்கிறார் சீ.வி...

ஆசிரியர் - Editor I

இலங்கையில் 18 வயதை கடந்த சகலருக்கும் இராணுவ பயிற்சி வழங்கப்படுவதை வரவேற்கிறேன். என கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஷ்வரன், அந்த பயிற்சியை தமிழ்களே வழங்கவேண்டும் எனவும் முன்னாள் போராளிகளை அதற்கு பயன்படுத்தலாம். எனவும் கூறியுள்ளார்.

18 வயதை கடந்த அனைவருக்கும் இராணுவப்பயிற்சி அளிக்கும் யோசனையை முன்வைத்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர் சரத் வீரசேகரவின் யோசனை குறித்து கருத்து கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது குறித்து இவர் மூலும் கூறுகையில், அவ்வாறு பயிற்சி அளிப்பதாயின், தமிழ் மொழி அதிகாரிகளைக் கொண்டு வடக்கு, கிழக்கு பகுதிகளில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

இல்லாவிட்டால் அந்த பயிற்சிகளை அளிப்பதற்கு தாம் எதிர்ப்பதாகவும் அவர் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையில் கூறியிருக்கின்றார்.


வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு