யாழ்.மருதனார்மடம் பகுதியில் விபத்து..! இளைஞன் பலி, மேலும் ஒருவர் படுகாயம்..
யாழ்.மருதனார்மடம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
குறத்த விபத்தில் யாழ்.அரியாலை பார்வதி வித்தியாலய விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய மயூரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
தன்னுடைய சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்படப்போவதை அவதானித்த மயூரன்
தப்பிக்க முயன்று பாய்ந்ததாகவும் வீதியில் அவர் வீழ்ந்தபோது அருகே வந்த வாகனம் அவர் மீது மோதியதாலேயே அவர் உயிரிழந்ததாகவும் தெரியவருகிறது.
இதேவேளை மயூரனின் சகோதரனும் விபத்தினால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.