யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் பன்றிக்கு மின்சார பொறி அமைத்த இரு குடும்பஸ்த்தர்கள் அதே பொறியில் சிக்கி பலி..! சடலங்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I

பன்றிக்கு மின்சார பொறிவைக்க சென்றவர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்திருக்கின்றனர். 

குறித்த சம்பவம் மன்னார் - திருக்கேதீஸ்வரம் மாளிகைதிடல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் அடம்பன் பள்ளிவாசல் பிட்டி பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான மூக்கையா மகேந்திரன் (வயது-45) 

மற்றும் வேட்டையார் முறிப்பு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான அந்தோனிப்பிள்ளை தேவசங்கர் (வயது-37) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிக்கு அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து

சட்ட விரோதமான முறையில் மின்சார இணைப்பை பெற்று வீதிக்கு சற்று தொலைவில் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்ட விரோதமான முறையில் அமைத்த 

மின் பொறியில் சிக்கியே குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு