யாழ்.மீசாலையில் நடக்கவிருந்த கோர விபத்து இராணுவம் மற்றும் இளைஞர்களின் துரித முயற்சியால் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது..!

ஆசிரியர் - Editor I

யாழ்.எழுதுமட்டுவாழ் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் புகையிரத கடவையை கடக்க முயற்சித்த கனரக வாகனம் நடு தண்டவாளத்தில் நின்றுவிட்ட நிலையில் துரிதமாக செயற்பட்ட படையினரால் கோர விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

கடவையை கடக்க முயன்ற கனரக வாகனம் செயலிழந்து நடு தண்டவாளத்தில் நின்றுள்ளது. இதன்போது அங்கிருந்த சில இளைஞர்கள் புகையிரதம் நெருங்க முன் 

வாகனத்தை கடவையை விட்டு தள்ள முட்பட்டும் முயற்சி பயனலிக்கவில்லை, உடனே இளைஞர்கள் உடனே தமது மேலாடையை கழற்றி புகையிரதத்தை நிறுத்த கோரியுள்ளனர். 

ஆனாலும் அதிவேக புகையிரதம் என்பதால் வேகத்தை கட்டுபடுத்த தாமதமானது இதற்கிடையில் ஏ- 9வீதி ஊடாக பயணித்த இராணுவத்தினர் இளைஞர்களுடன் இணைந்து தண்டவாளத்தில் சிக்கிய வாகனத்தை வெளியேற்றினர்.

இதனால் நூலிழையில் கோர விபத்து தடுக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு