இந்தியாவின் கொவிட் -19 தடுப்பூசி சற்றுமுன் இலங்கையை வந்தடைந்தது..! பணிகள் நாளை ஆரம்பம், சீனாவிலிருந்தும் வருகிறது..

ஆசிரியர் - Editor I

இந்திய அரசாங்கம் நன்கொடையாக வழங்கிய சுமார் 5 லட்சம் கொவிட் 19 தடுப்பூசிகள் இன்று நண்பகல் இலங்கைக்கு வந்து சேர்ந்திருக்கின்றது. 

 இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசிகள் (AstraZeneca COVIShield) 500,000ஐ மும்பையில் இருந்து 

ஏற்றிக்கொண்டுவந்த Airindia விமானம் Airbus A321 விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சற்று முன்னர் 11.40 மணியளவில் தரையிறங்கியது. 

இந்தியா அரசு இலங்கைக்கு நட்பு ரீதியாக இவற்றை வழங்கியுள்ளது. கொண்டுவரப்பட்ட 500,000 கொவிஷீல்ட் தடுப்பூசிகள் 250,000 நபர்களுக்கு வழங்கப்படும். 

தடுப்பூசிகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட பிறகு அவை மத்திய தடுப்பூசி களஞ்சித்தியத்திற்கு அனுப்பப்படும். அங்கு 2 செல்சியஸ் இல் களஞ்சியப்படுத்தப்படும். 

பிராந்திய மையங்களுக்கு தடுப்பூசிகள் விநியோகம் இன்று மதியத்தின் பின்னர் தொடங்கும். தேசிய தடுப்பூசி இயக்கம் நாளை தொடங்கும்.

முதல் கட்டத்தின் கீழ், COVID சுகாதார பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னணி பணியாளர்கள், 

அடுத்த கட்டம் பாதுகாப்பு படையினர் தடுப்பூசி பெறுவார்கள். ஒரு நபர் இரண்டு வார இடைவெளியில் இரண்டு முறை தடுப்பூசி பெறுவார்.

பொதுமக்களிற்கான விநியோகத்தின் போது, 60 வயதிற்கு மேற்பட்ட நபர்களை முன்னுரிமை பட்டியலில் பெறுவார்கள்.

இதேவேளை சீனா இலங்கைக்கு நட்பு ரீதியாக 3 இலட்சம் Sinopharm தடுப்பூசிகளை வழங்கவுள்ளது. இது பெப்ரவரி ஆரம்பத்தில் வந்தடையும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு