மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த பிரபல பாடசாலை ஒன்றின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் கைது..!

ஆசிரியர் - Editor I

பாடசாலை மாணவர்களுக்கு ஈஷிஹஸ் மூலமாக போதைப்பொருள் விற்பனை செய்த பிரபல பாடசாலை ஒன்றின் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் மாத்தளையில் உள்ள பிரபல பாடசாலையில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மேற்படி நபர் மாணவர்கள் இருவருக்கு கஞ்சா விற்பதற்காக 10,000 ரூபாய் பணத்தை ஈஷிகேஷ் முறையில் பெற்றுக்கொண்டுள்ளதுடன் 

கஞ்சாவை மாணவர்களுக்கு விற்பனை செய்ய முயன்றபோதே கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது மேற்படி நபரிடமிருந்து 1,476 மில்லிகிராம் கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேற்படிப் பயிற்றுவிப்பாளர் 

மிக நீண்ட காலமாக மிகவும் சூட்சுமுமான முறையில் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு