யாழ்.மீசாலை - புத்துார் வீதியில் விபத்து..! இருவர் காயம், மாடு வீதியின் குறுக்கே ஓடியதால் அசம்பாவிதம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மீசாலை - புத்துார் வீதியில் மோட்டார் சைக்கிள் மீத பட்டா வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். 

இந்த விபத்து இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. மேற்குறித்த வீதியால் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிரே மாடு ஓடியதால் சடுதியாக

பிறேக் பிடித்த நிலையில் பின்னால்வந்த பட்டா வாகனம் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு