யாழ்ப்பாணம் வந்துகொண்டிருந்த கார் மீது லொறி மோதி கோர விபத்து..! தாயும் பிள்ளையும் படுகாயம்..

ஆசிரியர் - Editor I

யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் கார் ஒன்றின் மீது லொறி மோதி விபத்துக்குள்ளானதில் தாயும் பிள்ளையும் படுகாயமடைந்தள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காரொன்றில் யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணித்த நிலையில், 

உணவருந்துவதற்காக மதவாச்சிக்கு அண்மையில் ஏ-9 வீதியில் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். உணவருந்தியதன் பின்னர் தாயும் பிள்ளையும் காரில் ஏறி அமர்ந்திருந்துள்ளனர்.

இதன்போது பின்னாலிருந்து வந்த லொறியொன்று குறித்த காரின் மீது மோதியதுடன் காரின் முன்னாலிருந்த முச்சக்கரவண்டிகள் இரண்டின் மீதும் மோதியுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த தாயும் பிள்ளையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு