ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலமையில் 16 சட்டத்தரணிகள் நீதிமன்றில் அதிரடி..! வெடுக்குநாறிமலை ஆலய நிர்வாகம் மற்றும் பூசகர் விடுதலை..

ஆசிரியர் - Editor I

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகம் பிணையில் விடுதலை செய்யப்பட்துடன் வழக்கு மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

வழக்கு திகதியில் மன்றில் ஆஜராகவில்லை. என்ற குற்றச்சாட்டில் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பூசகர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 

குறித்த வழக்கு விசாரணை மீண்டும் இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலமையில், 

சிரேஷ்ட சட்டத்தரணிகளான அன்டன் புனிதநாயகம், குருஸ், தயாபரன் உள்ளிட்ட 16 சட்டத்தரணிகள் மன்னில் ஆஜராகி ஆலய நிர்வாகத்திற்கு சார்பாக வாதிட்டனர். 

வழக்குத்தொடுனர்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரமும் கௌரவ மன்றினால் நிராகரிக்கப்பட்டது. வழக்கு மீண்டும் மேமாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு