யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவருக்கு கொரோனா..! தாதியர் உட்பட 7 பணியாளர்கள் தனிமைப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor I

கொழும்பில் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில் யாழ்ப்பாணம் வந்திருந்த ஒருவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுபையில், 

21.01.2021 அன்று கொழும்பில் PCR  பரிசோதனை செய்யப்பட்டு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக நோயாளி ஒருவர் 

கடந்த 23 ம் திகதி உறவினர்களால் அழைத்து வரப்பட்டார். 25 ம்  திகதி PCR  பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . அவருக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர் தாதியர்கள் உள்ளடங்களாக 

7 பேர் சுய தனிமைப்படுத்தலிலள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான  PCR  பரிசோதனைகள் எதிர்வரும் நாட்களில் நடைபெறும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு