வடமாகாண மக்களுக்கு பெப்ரவரி 2ம் வாரத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்..! மாகாண சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I

எதிர்வரும் மாசி மாதம் 2ம் வாரம் தொடக்கம் வடமாகாணத்தில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

யாழ். மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கல் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, நாளை ஆறு இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளன. முதற்கட்டமாக சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. 

இரண்டாம் கட்டமாக பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக் குட்பட்ட பொதுமக்களுக்கு 

கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது எனத் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு