யாழ்.மாநகருக்குள் மேலும் சில வீதிகளில் வீதி சமிக்ஞைகளை பொருத்த தீர்மானம்..! 2ம் திகதி முதற்கட்ட நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாநகருக்குள் மக்கள் நடமாட்டம் அதிகமான மேலும் சில வீதிகளில் சமிக்ஞை விளக்குகள் பொருத்த யாழ்.பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

யாழ்.பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலமையில் நடைபெற்றிருந்தது. இதன்போது குறித்த விடயம் ஆராயப்பட்டுள்ளது. 

இதன்படி யாழ்ப்பாணத்தில் ஸ்ரான்லி வீதி - கே.கே. எஸ் வீதி சந்தி, ஸ்ரான்லி வீதி - மணிக்கூட்டுவீதி சந்தி, கஸ்தூரியார்வீதி - நாவலர்வீதி சந்தி, 

இலுப்பையடி சந்தி, கொழும்புதுறை வீதி - பழைய பூங்கா வீதி சந்தி போன்ற இடங்களுக்கான புதிய வீதி சமிஞ்ஞைகள் பொருத்துவதற்கான பரிந்துரை செய்யப்பட்டள்ளது. 

அதற்கான முடிவுகள் பெப்ரவரி 2ஆம் திகதி யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும். 

என இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு