யாழ்.நீர்வேலியில் வாள்வெட்டு குழு வீடு புகுந்து அட்டகாசம்..! கோடரி கொத்துக்கு இலக்கான சகோதரர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I

யாழ்.நீர்வேலி பகுதியில் வீடு புகுந்து வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் சகோதரர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் நேற்றய தினம் இரவு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டு குழு வீட்டுக்குள் புகுந்து சகோதரர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. 

சம்பவத்தில் கோடாரி கொத்துக்கு இலக்காகி காயமடைந்த சகோதரர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு