வயோதிப பெண்ணின் சங்கிலியை அறுத்து விற்ற காசில் தொலைபேசி வாங்கிய போதை அடிமையான இளைஞன் கைது..! யாழ்.கல்வியங்காட்டில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வயோதிப பெண்ணின் சங்கிலியை அறுத்து விற்ற காசில் தொலைபேசி வாங்கிய போதை அடிமையான இளைஞன் கைது..! யாழ்.கல்வியங்காட்டில் சம்பவம்..

யாழ்.கல்வியங்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணின் சங்கிலியை அறுத்து சென்று தொலைபேசி வாங்கிய இளைஞன் பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று மாலை கல்வியங்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. வயதான பெண் ஒருவர் தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த சமயம் அவர்களை பின்தொடர்ந்த குறித்த 

இளைஞன் வயோதிப பெண்ணின் சங்கிலியை அறுத்து சென்றுள்ளார். பின்னர் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்கப்பட்ட நிலையில், 

கல்வியங்காடு வீதியில் உள்ள சீ.சி.ரீ.வி கமரா பதிவுகள் பரிசோதிக்கப்பட்டு இளைஞன் அடையாளம் காணப்பட்ட நிலையில் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணையில்

அவர் கைது செய்யப்பட்டார். கைது யெ்யப்படும்போது அவருடைய உடமையில் இருந்து பெறுமதிவாய்ந்த இரு தொலைபேசிகள் மற்றும் 90 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. 

குறித்த நபர் கொக்குவில் பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞர் எனவும் போதைக்கு அடிமையான குறித்த இளைஞன் அறுத்து சென்ற சங்கிலியை விற்று தொலைபேசி மற்றும் பணத்தை வைத்திருந்தார்

என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட இளைஞன் நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு