வடமாகாணம் முழுவதும் தனியார் கல்வி நிலையங்களை திறக்க அனுமதி..! சுகாதார அமைச்சின் சுற்றறிக்கை உடனடியாக அமுல்படுத்தப்பட்டது..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக முடக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களை மீளவும் திறக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாக தனியார் கல்வி நிலையங்களை திறக்க சுகாதார அமைச்சு அனுமதியளித்து சுற்றிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில் வடமாகாணம் முழுவதும் தனியார் கல்வி நிலையங்களை நாளை முதல் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. 

மேற்படி தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், சுகாதார அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வடக்கு மாகாணத்தில் தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் பிரேத்தியேக வகுப்புகளை நடத்தவேண்டும்.

அத்துடன், ஒவ்வொரு பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியும் தனியார் கல்வி நிலையங்களில் கொவிட் -19 சுகாதார நடைமுறைகள் பின்பற்றுவதனை கண்காணிப்பாளர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரு வகுப்பில் இருக்கைகளின் திறனில் 50 சதவீதம் வரை அல்லது அதிகபட்சம் 100 மாணவர்களுக்கு மட்டுமே இடமளிக்க முடியும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணத் தடை மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைப்படுத்தும் பகுதிகளில் தனியார் கல்வி நிலையங்களை நடத்த முடியாது என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு