பாடசாலையில் திடீரென மயங்கி விழுந்த மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I

மலையகம் - ஹட்டனில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையில் கொவிட்-19 தொற்றிருப்பது உறுதியானது.

இதேவேளை வகுப்பிலுள்ள 37 மாணவர்கள் மற்றும் 14 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாடசாலை வளாகம் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டதாகவும் அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

மேலும் குறித்த மாணவரின் தாயாருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையிலும் கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு