யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றின் PCR முடிவுகள் வெளியானது..! வடக்கில் 30 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் 625 பேருக்கு நேற்றயதினம் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் 30 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

இதன்படி யாழ்.மாவட்டத்தில் ஒருவருக்கும், மன்னார் மாவட்டத்தில் 23 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 6 பேருக்குமாக 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும் ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் வடமாகாணத்தை சேர்ந்த 20 பேருக்கு ஏற்கனவே தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு