பாம்பு தீண்டியதை அறியாத குடும்பஸ்த்தர் திடீர் மரணம்..! உயிரிழந்த பின்பே பாம்பு தீண்டியது உறுதியான பரிதாபம், யாழ்.மீசாலையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மீசாலை பகுதியில் மாடு மேய்க்க சென்றவர் பாம்பு தீண்டி உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 

மீசாலை தெற்கு பகுதியை சேர்ந்த யோ.குமார் (வயது43) என்பவர் சரசாலை பகுதியில் மாடு மேய்க்க சென்றுள்ளார். 

இதன்போது புற்களுக்குள் இருந்த பாம்பு அவரை தீண்டியுள்ளது. அதனை அறியாத அவர், மாலை வீடு திரும்பிய நிலையில் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டமையை அடுத்து 

வீட்டில் இருந்தோர் அவரை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கபட்ட போதிலும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு