யாழ்.மாவட்டத்தில் 10 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்படுகிறது..! பாடசாலைகள் விபரமும் வெளியானது..
யாழ்.மாவட்டத்தில் 10 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணை தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் பரிந்துரையில் 10 பாடசாலைகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி நெடுந்தீவு மகா வித்தியாலயம், வேலணை மத்திய கல்லூரி, ஊர்காவற்றுறை சென். அந்தோனியார் கல்லூரி, காரைநகர் இந்துக் கல்லூரி,
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, ஸ்கந்தவரோதயா கல்லூரி, ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி– புத்தூர்,
மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மற்றும் உடுத்துறை மகா வித்தியாலயம் ஆகியன இவ்வாறு தரமுயர்த்தப்பட்டுள்ளது.