கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த ரயிலில் பயணித்தவருக்கு கொரோனா தொற்று உறுதி..! திடீர் அன்டிஜன் பரிசோதனையிலேயே தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த ரயிலில் பயணித்தவருக்கு கொரோனா தொற்று உறுதி..! திடீர் அன்டிஜன் பரிசோதனையிலேயே தொற்று உறுதி..

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ரயிலில் பயணித்த ஒருவருக்கு அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

கொழும்பிலிருந்து யாழ். நோக்கிச் சென்ற ரயிலில் வருகை தந்த வவுனியாவைச் சேர்ந்தவர்களிடம் வவுனியா ரயில் நிலையத்தில் வைத்து சுகாதாரத் துறையினர் அன்டிஜென் சோதனை மேற்கொண்டனர். 

இதன்போது புத்தளம் பகுதியிலிருந்து வவுனியா சூடுவெந்தபுலவு நோக்கி வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அந்நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனையும் மேற்கொள்ள சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு