யாழ்.மாவட்டத்தில் சுகாதார கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் மேல் நடவடிக்கைகள் குறித்து கட்டளை தளபதி- மாவட்ட செயலர் இடையில் பேச்சு..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தின் கொரோனா நிலவரம் குறித்து மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு இணைப்பு அதிகாரியும் கட்டளை தளபதியுமான

மேஜர் ஜெனரல் செனரத் பண்டாரவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது 

குறித்த சந்திப்பின் போது யாழ். மாவட்டத்தில் தற்போதுள்ள கொரோனா நிலைமைகள் மற்றும் எதிர்காலத்தில் யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள்

மற்றும் தற்போதைய நிலையில் பாடசாலைகள் மற்றும் பொதுச் சந்தைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக கொரோனா தொற்று  பரவுவதை தடுத்தல் தொடர்பாக பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் குறித்த சந்திப்பின்போது ஆராயப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் பலாலி இராணுவ கட்டளை தலைமையக ராணுவ உயர் அதிகாரிகள் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வருட ஆரம்பத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில்  நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு