பூநகரி - தெளிகரை கிராமத்தில் குடும்ப பெண் குரூரமாக கொலை..! இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு, தீவிர விசாரணையில் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி பூநகரி- தெளிகரை கிராமத்தில் குடும்ப பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

தெளிகரை கிராமத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். 

வயிற்று பகுதியில் வெட்டு காயங்களுடன் குறித்த பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் 37 வயதுடை 

ரூபஸ் கிருஸ்ணகுமாரி என்ற 3 பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குறித்த பெண்ணின் வயிற்று பகுதியில் வெட்டு காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை சம்ப இடத்திலிருந்து கூரிய ஆயுதமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்த பெண்ணின் சடலம் 

நீதவான் பார்வையிட்டதன் பின்னர் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு