துப்பாக்கி முனையில் நிதி நிறுவனத்திற்குள் புகுந்து துணிகர கொள்ளை..! 5 பொலிஸ் குழுக்களை அமைத்து தேடுகிறது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I

நிதி நிறுவனத்திற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் சுமார் 40 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் ஹம்பகா - மிரிஸ்வத்த பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் இடம்பெற்றிருக்கின்றது. 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர். பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்று மதியம் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.முகத்தை முழுவதுமாக மறைக்க கூடிய முக கவசம் 

மற்றும் கருப்பு ஆடை அணிந்து வந்த இருவர் நிதி நிறுவனத்தில் புகுந்து அங்கிருந்தவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.சம்பவம் தொடர்பில் 5 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு