வைபர் மீதான தடை நள்ளிரவுடன் நீக்கம் - பேஸ்புக் மீதான தடை வெள்ளி வரை நீடிக்கும்!

ஆசிரியர் - Admin
வைபர் மீதான தடை நள்ளிரவுடன் நீக்கம் - பேஸ்புக் மீதான தடை வெள்ளி வரை நீடிக்கும்!

பேஸ்புக் உள்ளிட்l சமூக வலைத்தளங்கள் மீதான தற்காலிக தடை எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலையிலேயே நீக்கப்படும் என தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர், ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டடிருந் குழப்பநிலையின்போது, பேஸ்புக்கில் வெறுக்கதக்க, வன்முறையை தூண்டும் விதமான பதிவுகள் பதிவேற்றப்பட்டிருக்கும் நிலையில், அதனை அகற்றுவதற்கு பேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரிகள் குழு ஒன்று நாளைமறுதினம் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை வைபருக்கு (Viber) விதிக்கப்பட்டிருந்த தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்வரும் நாட்களில் நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு