மாகாணங்களுக்கிடையிலான இ.போ.ச பேருந்து சேவைகள் மீளவும் ஆரம்பம்..! திகதியை அறிவித்தது இ.போ.ச..

ஆசிரியர் - Editor I

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கிடையிலான இ.போ.ச பேருந்து சேவைகள் 2021 ஜனவரி 1ம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேற்படி தகவலை இ.போ.ச தலைவர் கிங்ஸ்லி ரணவக்க கூறியிருக்கின்றார். இதன்படி ஜனவரி 1ம் திகதி தொடக்கம் நீண்ட துார சேவைகள் மற்றும் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகள் 

மீளவும் ஆரம்பிக்கப்படும். இ.போ.ச தற்போது தனது வருமானத்தின் கால் பகுதியை மட்டுமே தற்போது பெற்றுவருகின்றனர். அதற்கு காரணம் பொது போக்குவரத்தின் மீது மக்களுக்குள்ள அச்சம் காரணமாக, 

மாற்று வழிகளை கையாண்டே மக்கள் பயணம் செய்துவருகின்றார்கள். என அவர் மேலும் கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு