மீன் சாப்பிடுவதற்கு மக்கள் அச்சப்பட தேவையில்லை..! ஊடகவியலாளர் சந்திப்பில் பச்சையாக மீனை சாப்பிட்டு காட்டிய முன்னாள் இராஜாங்க அமைச்சர்..

ஆசிரியர் - Editor I

மக்கள் மீன் சாப்பிடுவதற்கு அச்சப்பட தேவையில்லை, தாரளமாக மீன் சாப்பிடலாம் என கூறியிருக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராய்ச்சி பச்சையாக மீனை சாப்பிட்டு காட்டியுள்ளார். 

கொழும்பில் இன்று  நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட மீன்பிடித்துறையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி பச்சையாக மீனை சாப்பிட்டு காட்டியுள்ளார்.

மக்கள் மீன்களை கொள்வனவு செய்யாத காரணத்தினால் மீனவர்கள் பெரும் சிரமங்களை அனுபவிப்பதாக கூறினார்.மீன்களில் கொரோனா வைரஸ் இல்லை என்று கூறிய அவர் 

அதனை உறுதிப்படுத்தும்வகையில் செய்தியாளர்களின் முன்னிலையில் மீனை பச்சையாக சாப்பிட்டுக் காட்டினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு