கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் - காரைநகருக்கு சடலத்தை கொண்டுவந்த 5 பேர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டனர்..!

ஆசிரியர் - Editor I

உயிரிழந்த ஒருவருடைய சடலத்தை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் - காரைநகருக்கு கொண்டுவந்த 5 பேர் குடம்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஞ0காரைநகரைச் சேர்ந்த நபர் கொழும்பு 13இல் வசித்துவந்த நிலையில் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துள்ளார். 

இறுதிச் சடங்கிற்காக சடலத்தை நேற்று கொழும்பில் இருந்து காரைநகருக்கு கொண்டுவந்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி குறித்த சடலத்தை கொழும்பில் இருந்து காரைநகருக்கு கொண்டுவந்ததனர் எனக் கூறி சடலத்தை கொண்டுவந்த ஐவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை இறந்தவரின் உடல் கோப்பாய் கோம்பயன்மணல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு