விலங்குகளுக்கு வைக்கப்பட்ட சட்டவிரோத மின் பொறியில் சிக்கி 4 பிள்ளைகளின் தாய் பலி..!

ஆசிரியர் - Editor I

மிருகங்களுக்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார பொறியில் சிக்கி 4 பிள்ளைகளின் தாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மேற்படி சம்பவம் அக்கரபத்தன - மன்ராசி நிவ் போட்மோர் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிழந்தவர் காளி கிட்னம்மாள் (65 வயது) என்ற நான்கு பிள்ளைகளின் தாயார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த பெண் பூஜைக்காக வாழையிலை வெட்டுவதற்காக மேற்படி தோட்டத்திற்கு சென்றுள்ளார். 

நீண்ட நேரம் அவர் வருகை தராமையினால் வீட்டில் உள்ளவர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது அவர் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். அதன் பின்னர் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, 

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், மிருகங்களுக்காக பொருத்தப்பட்டிருந்த சட்டவிரோத மின்சாரக் கம்பியில் சிக்குண்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.

பெண்ணின் சடலம் நுவரெலியா நீதவானின் மேற்பார்வையினை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு