SuperTopAds

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்!

ஆசிரியர் - Admin
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினர். முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத்தேடி கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

கடந்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை, “அரசாங்கம் தமக்கு எந்த தீர்வையும் தராது என்பதை 3 தடவையாக தம்மை சந்தித்த ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச விசாரணையே தமக்கான தீர்வாக அமையும்” என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர். 

இன்றைய கவனயீர்ப்பு போராட்டத்தில் மதகுருமார், சிவில் சமூக பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.