கொரோனா 3ம் அலை ஜனவரியில் உருவாகலாம். இது இன்னும் ஆபத்தானதாக இருக்கும் விஞ்ஞானிகள் எச்சரிப்பதாக கூறுகிறார் சுகாதார அமைச்சின் செயலாளர்..!

ஆசிரியர் - Editor I

இலங்கை மக்கள் இன்னும் இரு வருடங்களுக்கு கொரோனா வைரசுடனேயே வாழவேண்டும். என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜயருவான் பண்டார தொிவித்துள்ளார். 

மக்கள் கொவிட் 19 உடன்வாழபழகிக்கொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இரண்டாவது அலையின் போது கொரோனா வைரசிற்கு தீர்வை காணவிட்டால் மூன்றாவது அலை உருவாகலாம். 

என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். மூன்றாவது அலை ஜனவரியில் உருவாகலாம் அது இன்னமும் ஆபத்தானதாக காணப்படலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக சுகாதாரவிதிமுறைகளை பின்பற்றி வைரசினை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் ஏனைய நாடுகளை போல இலங்கை மக்களும் கொரோனா வைரசுடன் வாழவேண்டியிருக்கும்; என அவர் குறிப்பிட்டுள்ளார். 

சில நாடுகள் தங்கள் நாடுகளில் கொரோனாவைரஸ் காணப்படுகின்ற போதிலும் தொடர்ந்து முன்னோக்கி செல்கின்றன என குறிப்பிட்டுள்ள ஜயரூவன் பண்டார 

இலங்கை பொருளாதார வளர்ச்சி கல்வி போன்றவற்றை இடையில் தவறவிட்டுவிட்டது இந்த இடைவெளியை நிரப்பவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதை தவிரவேறு மந்திரமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு