நாட்டை முடக்கினால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தே ஜனாதிபதி அதிகம் கவனம் செலுத்துகிறார்..! ஒரு வாரத்திற்கும் கூட முடக்க அவர் விரும்பவில்லை..

ஆசிரியர் - Editor I

நாட்டை ஒருவாரம் முடக்குவது தொடர்பாக கலந்தாலோசித்தோம். எனினும் நாட்டு மக்களுடைய பிரச்சினைகள் குறித்தே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அதிகம் கவனம் செலுத்தியதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியிருக்கின்றார். 

இந்நிலையில் மேல் மாகாணம் மற்றும் பல பகுதிகளில் மட்டுமே ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது, என்றார். கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க மக்கள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு அனைத்து நடவடிக்கைகளையும் முடிந்தவரை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு