யாழ்.ஊர்காவற்றுறை கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு..!
யாழ்.ஊர்காவற்றுறை கடற்கரையில் ஆண் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடலில் மிதந்துவந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது.
சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.