PCR பரிசோதனை நடத்திய பொது சுகாதார பிரிவு அதிகாரிகள் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I

பேலியகொட மின் சந்தையில் PCR பரிசோதனை நடாத்திய கொழும்பு மாநகரசபை பொது சுகாதார பிரிவு அதிகாரிகள் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நகரசபை அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டிருக்கின்றார். 

இந்நிலையில், கொழும்பில் ஒக்டோபர் 18 முதல் நேற்று வரை மொத்தம் 5,368 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் 937 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நேற்று திங்கட்கிழமை மாத்திரம் 541 கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளனர். 

அவர்களில், கம்பாஹா மாவட்டத்தில் இருந்து 304 பேரும், கொழும்பிலிருந்து 191 பேரும், தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இருந்து 42 நோயாளிகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு