யாழ்.தேசிய கல்வியியற் கல்லுாரியில் தனிமைப்படுத்தப்பட்டவருக்கு மதில் வழியாக கள்ளு விற்றவர்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்குள் தள்ளப்பட்டனர்..!

ஆசிரியர் - Editor I

யாழ்.தேசிய கல்வியியற் கல்லுாரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் ஒரு சிலர் கல்லுாரி சுற்றாடலில் உள்ள சிலருடன் தொடர்பினை எடுத்து மதில் வழியாக கள்ளு வாங்கிய சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. 

இந்நிலையில் மதில் வழியாக கயிற்றில் கட்டி கள்ளு விற்பனை செய்த 8 பேர் வரையில் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். 

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. அபாய வலயங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட ஒரு தொகுதி மக்கள் யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒரு சிலர் அங்கிருந்து சுற்றாடலில் உள்ள சிலருடன் தொடர்பினை ஏற்படுத்தி மதில் வழியாக கயிற்றில் கட்டி கள்ளு வாங்கியுள்ளனர். 

குறித்த விடயம் ஊர் மக்களால் சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸாருக்கு தொிவிக்கப்பட்டதை தொடர்ந்து கள்ளு விற்பனை செய்த சுமார் 8 பேர் வரை அடையாளம் காணப்பட்டு

கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு